குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, January 4, 2018

பெண்களை நம்பினால் நம்புங்கள்

பாரதியின் ”பீரங்கி சிப்பாய்” படித்ததும் எனக்குள் எழுந்திருந்த தேசிய கவியின் பிம்பம் ஆட்டம் காண ஆரம்பித்தது. முறுக்கிய மீசைக்குள்ளும் முண்டாசுக்குள்ளும் ஈரும் பேனும் இருந்திருக்குமோ என சந்தேகம் தோன்ற ஆரம்பித்தது. காலச்சுவடு பத்திரிக்கையில் பல பின் குறிப்புகளுடன் வெளியான அந்தக்கட்டுரை எனக்குத் தலைவலியை உண்டாக்கியது. சரியான எரிச்சல். இதோ கீழே இருக்கும் இணைப்பில் இருக்கும் அந்தக் கட்டுரையைப் படித்து விடுங்கள்.

http://tamil.thehindu.com/opinion/article19659327.ece

இதில் வாஸந்தி வேறு. ”தைரியம்னா என்னான்னா பயம் இல்லாம நடிக்கிறதுன்னு” ஏதோ ஒரு படத்தில் கேட்டேன். 

அம்மா இருக்கிறவரை வாயையும், பேனாவையும், சூ....யும் மூடிக் கொண்டிருந்த எழுத்தாளர்கள் அவர் இறந்ததும் வீறு கொண்டு அம்மா பற்றிய புத்தகங்களை வெளியிடுகின்றார்கள். அந்தப் புத்தகத்தின் தலைப்பு மறந்து விட்டது. அறிமுக உரையில் ”எங்கிருந்தோ வந்த ஒரு கூட்டம்” என்ற வரியோடு முடிந்திருக்கிறது. என்ன ஒரு வன்மம்? அம்மாவை விமர்சிக்கின்றேன் பேர்வழி என தன் வன்மத்தை வழித்து எழுதியிருக்கிறார் போல. அம்மா உயிரோடா இருக்கிறார்கள்? அதையெல்லாம் மறுக்க? பாவம். அவரால் எனக்கொன்றும் ஆகவில்லை. ஆனால் மனசுன்னு ஒன்னு இருக்கே? வாஸந்தியின் மீது எரிச்சல் தான் மண்டியது. எழுத எவ்வளவோ இருக்கிறது. வாழ்க்கையில் தனக்கென வாழாமல் வாழ்ந்து மறைந்த பெண்மையைப் பற்றி எழுத எப்படித்தான் மனசு வருகிறதோ தெரியவில்லை.

இந்த எரிச்சலில் யூடியூப்பை தோண்டிக் கொண்டிருந்தேன். ரஜினி அலப்பறை வீடியோக்கள் வரிசை கட்டி நின்றன. ஒரு எழவும் தெரியாமல் என்னத்துக்கு அரசியலுக்கு வருகிறேன் என்று அலப்பறை கொடுத்துக் கொண்டிருக்கிறாரோ தெரியவில்லை. ஆளாளுக்கு வச்சு செய்ய ஆரம்பித்து விட்டார்கள். படையப்பாவில் ரம்யா கிருஷ்ணனை ஜெயித்தது மாதிரி ஜெயித்து விடலாம் என்று நினைத்திருப்பார் போல. குஷ்பூவோ அல்லது ஷ்ரேயாவோ நாளை தமிழகத்தின் துணை முதல்வராகி பின்னர் நயன்தாரா முதலமைச்சராகி விடுவார் என நம்புவோமாக. நம்புங்கள் நயன்தாரா முதலமைச்சர் கேண்டிடேட் என்றால் அடியேன் பிரச்சாரம் செய்வேன். என் கலாச்சாரம் அப்படி இருக்கிறது.

அரசியல் பெண்களின் உடலின் மீது கட்டமைக்கப்படுகிறது. ரஜினி தன் படங்களில் அழகிய ஹீரோயின்களை தடவி படம் பார்க்கும் தன் ரசிகர்களின் சா....... உசுப்பி விடுகிறார். ரஜினி மட்டும் நடித்தால் ஒரு தெரு (வேண்டாம் நாய் என்றால் நன்றி இருக்கும்) சினிமா பார்க்கப் போகாது. தேர்தல் பிரச்சாரத்துக்கு கூட்டம் சேர்க்க நடிகைகளை இறக்குவார் என நம்புவோம். நடிகைகளின் தொப்பூல்களைப் பார்த்து, அதே மூடில் போய் எச்சில் ஒழுக ஓட்டுப் போடுவோமாக. 

நாம் தடவினால் என்ன ரஜினி தடவினால் என்ன? எல்லாம் ஒன்று தானே என மனசு சமாதானம் சொல்லும். கிக்கு தடவலில் அல்லவா இருக்கிறது. சிவாஜியில் ஒரு பாடலில் ஷ்ரேயாவின் கவட்டியை விரித்துக் காண்பிப்பார் பாருங்கள் அந்த ஒரு காட்சிக்காக நூறு தடவை அந்தப் பாட்டைப் பார்த்திருப்பேன். எம்.ஜி.ஆர் ஹீரோயின்களைத் தடவி பிசைந்த போது பார்த்து ரசித்து ரசித்து ஓட்டாய் குத்துக்குத்துன்னு குத்திய வரலாறு நமக்கு இருக்கிறது அல்லவா? 

சரி! போகட்டும் சொந்தக் கதைகள். அதை எழுதினால் ரொம்பவும் செக்ஸியாகப் போய் விடும். சாருவாக இருந்தால் ஹமீது புக்குப் போடுவார். 1000 புக்குகள் விற்கும். அந்த லாபத்தில் நானும் 1000 ரூபாய் ஜெட்டி போடுவேன். அதுக்கெல்லாம் கொடுப்பினை வேண்டும். நமக்கெல்லாம் ஏது? இப்படி ஏதாவது எழுதி சொரிந்து கொண்டால்தான் உண்டு. 

அடச்சே, எங்கேயோ போய் விட்டேன்.

எனக்குப் பிடித்த ஒரு பாடலை அவ்வப்போது கேட்பதுண்டு. எரிச்சலோ கோபமோ வந்தால் சினிமா பாடல்களுக்குள் மூழ்கி விடுவேன். அப்படி என் மனதில் நீங்காத இடம் பிடித்த பாடல் இது. மோகனும் மஜா ராதாவும் நடித்திருப்பார்கள். மோகன் நூறு கோடி ரூபாய் சம்பளம் பெற்ற மாதிரி நடித்திருப்பார். மஜா ராதா ஆட்டு ஆட்டுன்னு ஆட்டி இருப்பார் இடுப்பை. 

இதோ அந்தப் பாடல் கீழே. முதலில் உள்ள பாடலைப் பார்த்து விட்டு கீழே இருக்கும் அடுத்தப் பாடலைப் பாருங்கள். 

மஜா ராதாவும் மோஹனும் நடித்த பாடல் இது.


உய்யலா ஜம்பாலா எனும் தெலுங்குப் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியோடு மிக்சிங் ஆன பாடலில் நடித்தவர் அவிகா கவுர் மற்றும் ராஜ் தருன். இந்தப் பாடலையும் பார்த்து விடுங்கள். (இந்த அம்மணி இப்போது செம குண்டு கத்திரிக்காய் போல இருக்கிறார்)


இந்தப் படத்தில் பாலைக் குடித்தவர் நிலையினை நினைத்து எனக்குள் பச்சாதாபமே எழுந்து விட்டது. அந்தப் பையன் என்ன செய்தான்? பாவம் அல்லவா? 

ஆகவே பெண்களை நம்பினால் நம்புங்கள்! அது அவரவர் விருப்பம்.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.